sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கூட்டுறவு பயிர் கடன் வழங்குவதில் தும்படைக்காகோட்டை முதலிடம் 

/

கூட்டுறவு பயிர் கடன் வழங்குவதில் தும்படைக்காகோட்டை முதலிடம் 

கூட்டுறவு பயிர் கடன் வழங்குவதில் தும்படைக்காகோட்டை முதலிடம் 

கூட்டுறவு பயிர் கடன் வழங்குவதில் தும்படைக்காகோட்டை முதலிடம் 


ADDED : பிப் 05, 2024 11:21 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை- திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் பயிர் கடன் வழங்கப்பட்டதில் தும்படைக்காகோட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ.6.34 கோடி வழங்கப்பட்டு முதலிடம் பிடித்தது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம் என அரசு அறிவித்தது.

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க 2023-24 ம் ஆண்டிற்கு ரூ.150 கோடி இலக்கு நிர்ணயம் செய்யபட்டது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஜன.31 வரை நீட்டிப்பு செய்யபட்டது.

விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோக்களை கொடுத்து விண்ணப்பித்தனர். ஆனால் மூவிதழ் அடங்கலுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டது.

வெள்ளை அடங்கலுக்கு கடன் வழங்காததால் விவசாயிகள் தவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக வெள்ளை அடங்கலுக்கும் பயிர் கடன் வழங்கலாம் என கூட்டுறவு அதிகாரிகள் அறிவித்தனர்.

ஜன.31 வரை திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 கூட்டுறவு சங்கங்களில் ரூ.120.52 கோடி கடன் வழங்கபட்டுள்ளது. இதில் ரூ.6.34 கோடி வழங்கி தும்படைக்காகோட்டை முதலிடம், ரூ.5.67 கோடி வழங்கி தொண்டி இரண்டாமிடம், ரூ.5.33 கோடி வழங்கி ஆண்டாவூரணி மூன்றாமிடம் பிடித்தது.






      Dinamalar
      Follow us