sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் தயார் நிலை

/

 ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் தயார் நிலை

 ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் தயார் நிலை

 ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் தயார் நிலை


ADDED : ஜன 07, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் அதிக ஆண்டுகள் வாழக்கூடிய உயிரினமான கடல் ஆமைகள் ஜன., முதல் வாரத்தில் இருந்து முட்டையிடுவதற்காக வரத்துவங்கி உள்ளன.

மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் சார்பில் வாலிநோக்கம் பம்பு ஹவுஸ், அடஞ்சேரி, சீலா மீன்பாடு, மேலமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கடற்கரையோரங்களில் பனை மட்டைகளால் வேலி அமைத்து குறிப்பிட்ட இடங்களில் ஆமைகள் வந்து முட்டையிடக்கூடிய இடங்களில் சேகரிக்கப்பட்டு அவற்றை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கின்றனர்.

நேற்று கீழக்கரை வனச்சர அலுவலகம் சார்பில் ரோந்து சென்ற போது ஏர்வாடி அருகே அடஞ்சேரி பகுதியில் மண்ணைத் தோண்டி 126 முட்டைகளை ஒரு ஆமை விட்டு சென்றது. அவற்றை சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் வைத்தனர். 45 முதல் 50 நாட்களுக்குப் பிறகு குஞ்சு வெளியில் வந்தவுடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர்.

குஞ்சு சிறியதாக இருக்கும் போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து பெண் ஆமை தேர்வு செய்யப்பட்ட இடத்தில் முட்டையிட்டு செல்வது அதன் அறிவை காட்டுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் பிரபு, சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமை முட்டைகளை சேகரித்தனர்.






      Dinamalar
      Follow us