sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை வழக்கில் ஜாமினில் வந்த இருவர் மீண்டும் கைது; கண்டித்து உறவினர்கள் மறியல்

/

கொலை வழக்கில் ஜாமினில் வந்த இருவர் மீண்டும் கைது; கண்டித்து உறவினர்கள் மறியல்

கொலை வழக்கில் ஜாமினில் வந்த இருவர் மீண்டும் கைது; கண்டித்து உறவினர்கள் மறியல்

கொலை வழக்கில் ஜாமினில் வந்த இருவர் மீண்டும் கைது; கண்டித்து உறவினர்கள் மறியல்


ADDED : மார் 16, 2025 12:30 AM

Google News

ADDED : மார் 16, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த இருவரை போலீசார் மீண்டும் கைது செய்ததைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் செய்து தீக்குளிக்க முயன்றனர்.

ஜன.,14ல் ராமேஸ்வரம் சேராங்கோட்டை தெற்கு கரையூரை சேர்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் நம்புகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தெற்கு கரையூரை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த சொக்கேஸ்வரன், அயன்சரண், அஸ்வின், நம்புசரண் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மற்ற 7 பேரும் நேற்று முன்தினம் ஜாமினில் வந்து பரமக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

அவர்களில் நேற்று மதியம் வீட்டில் இருந்த கருணாகரன் 20, சதீஷ்குமாரை 21, போலீசார் மீண்டும் திடீரென கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து உறவினர்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

அப்போது திடீரென சத்யா, விஜயலட்சுமி ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்து இருவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். பின் கைது செய்த இருவரையும் விடுவித்து ஒப்படைப்பதாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி உறுதி அளித்தார். இதையடுத்து மறியலை வாபஸ் பெற்றனர். இப்பிரச்னையால் 45 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்து சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us