ADDED : செப் 11, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், அரியலுார் தேவமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் செந்தமிழ்ச்செல்வன் 35. ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு டூவீலரில் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றார்.
ரோட்டை கடந்த போது நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசோதித்த டாக்டர் வழியில் இறந்ததாக தெரிவித்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.