ADDED : மார் 23, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே அபிராமத்தில் திருச்சுழியை சேர்ந்த ரமேஷ்குமார் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்க்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவரது டூவீலர் திருடு போனது.
அபிராமம் போலீசில் புகார் அளித்தார். கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் உத்தரவில் தனிப்படை போலீசார் சி.சி.டி.வி., கேமரா உதவியோடு டூவீலர் திருட்டு குறித்து விசாரணை செய்தனர்.
இதில் திருச்சுழியைச் சேர்ந்த அழகுராஜா 36, கைது செய்யப்பட்டார். டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டுக்கு உதவியாக இருந்த இரண்டு பேரை கமுதி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.