sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை நீர்.. நாறுதுங்க.. நடக்க முடியல... துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் அவதி

/

ரோட்டில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை நீர்.. நாறுதுங்க.. நடக்க முடியல... துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் அவதி

ரோட்டில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை நீர்.. நாறுதுங்க.. நடக்க முடியல... துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் அவதி

ரோட்டில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை நீர்.. நாறுதுங்க.. நடக்க முடியல... துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் அவதி


ADDED : ஜூலை 29, 2024 10:41 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதால் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.

துர்நாற்றத்தால் மக்கள் நடக்க முடியல. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

எனவே அடுத்து வரும் மழைக்காலத்தற்குள் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2012 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவு நீர் வெளியேற்ற சிதம்பரம்பிள்ளை ஊருணி, சிங்காரத்தோப்பு, குண்டுருணி, நாகநாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன.

இந்த 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு கழுகூரணியில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பாதாள சாக்கடை குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் சேதமடைந்தும், அடைப்புகள் ஏற்படுவதால் தெருக்கள், ரோடுகளில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நகரில் பல இடங்களில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது.

மக்களின் புகாரில் பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சு எடுக்கின்றனர். மீண்டும் அன்று இரவே அதே இடத்தில் குளம் போல கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.

துர்நாற்றத்தால் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே மழைக்காலத்திற்கு முன்பாக ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us