sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத கண்மாய்கள்: விவசாயிகள் கள ஆய்வு

/

பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத கண்மாய்கள்: விவசாயிகள் கள ஆய்வு

பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத கண்மாய்கள்: விவசாயிகள் கள ஆய்வு

பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத கண்மாய்கள்: விவசாயிகள் கள ஆய்வு


ADDED : ஏப் 20, 2025 04:49 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி அருகே மானாவாரி கண்மாய்களுக்கு பாசன வசதி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

பரமக்குடி தாலுகாவில் தடுத்தலான்கோட்டை, செம்பிலான்குடி, குறிஞ்சாக்குளம், வேப்பங்குளம் ஆகிய நான்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளது.

இதே போல் உண்டுபத்தி, பீர்க்கன்குறிச்சி, இடையன்குளம் என மூன்று சிறிய கண்மாய்கள் வானம் பார்த்த பூமியாக மானாவாரி கண்மாய்களாக உள்ளது.

இதன் மூலம் 2500 ஏக்கர் பாசன வசதி இருந்தும் அரசு தண்ணீர் கொண்டு வர வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் உள்ளது.

இதற்காக காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அர்ஜுனன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, தடுத்தலான்கோட்டை மகேந்திரன், ஓய்வு பெற்ற பி.டி.ஓ., காளிமுத்து, முருகேசன், ஜெயபாண்டி உள்ளிட்ட விவசாயிகள் கள ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நீர்வளத்துறை மதுரை மண்டல பொறியாளரை சந்தித்து இது போன்ற கண்மாய்களுக்கு நிரந்தர பாசன வசதி செய்து கொடுக்க முறையிட உள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us