sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்

/

உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்

உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்

உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 23, 2024 05:15 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

கிழக்கு கடற்கரை பகுதிகளான மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, கடலுார், முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களை ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

இதனால் மீனவர்கள் மீன்களை விற்பனை செய்வதற்கு சிரமப்படுவதுடன் பல மணி நேரம் கிராமங்களை சுற்றி வருவதால் மீன்களின் தரம் கேள்விக்குறியாகிறது.

எனவே கிழக்கு கடற்கரை மீனவர் பகுதி கிராமங்களுக்கு மையப்பகுதியான உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

இப்பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதால் பொதுமக்களும் ஒரே இடத்தில் பல வகையான தரமான மீன்களை வாங்கிச் செல்ல முடியும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us