/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
/
தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 05:13 AM
ஆர்.எஸ்.மங்கலம்: தை அமாவாசையை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளோர் ஆடி, தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆண்டுதோறும் தேவிபட்டினம் நவபாஷாணம் செல்கின்றனர்.
இந்நிலையில், நாளை தை அமாவாசை என்பதால் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் இருந்து தேவிபட்டினம் செல்வதற்கான பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து காலை நேரத்தில் ராமநாதபுரத்திற்கு போதிய பஸ்கள் இல்லாததால் ஆண்டு தோறும் தேவிபட்டினம் நவபாஷாணம் செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இதனால் கூடுதல் தொகை கொடுத்து வாடகை வாகனங்களில் செல்லும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நவபாஷாணம் செல்லும் பக்தர்களின் நலன் கருதி ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு தை அமாவாசை தினத்தில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.