/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புல்லமடை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
புல்லமடை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2025 12:20 AM
ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை சவேரியார்பட்டினம் விலக்கிலிருந்து புல்லமடை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் சவேரியார் பட்டினம், புல்லமடை, இரட்டையூரணி, ராமநாத மடை, வல்லமடை, மேலமடை உள்ளிட்ட பகுதி கிராமங்கள் பயனடைகின்றனர்.
மேலும் சவேரியார் பட்டினம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களும், இந்த ரோட்டையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.லேசான மழை பெய்தாலே ரோட்டில் தண்ணீர் தேங்கி விபத்துக்கள் தொடர்கின்றன. பள்ளி மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.