/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயக்கார ஊருணியில் முட்செடிகள்ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
சாயக்கார ஊருணியில் முட்செடிகள்ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
சாயக்கார ஊருணியில் முட்செடிகள்ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
சாயக்கார ஊருணியில் முட்செடிகள்ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஏப் 15, 2025 05:31 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள சாயக்கார ஊருணி பராமரிக்கப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகளில் முட்செடிகள் வளர்ந்தும், குப்பை தொட்டியாகி உள்ளது.அகற்றி சுத்தம் செய்ய மக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் நகரில் 20க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இவை நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கின்றன.நிலத்தடி நீர் 40 அடியில் கிடைத்தாலும் உப்பு நீராகவே உள்ளது.
இதனால் மக்கள் அன்றாட குடிநீர், சமையல் செய்வதற்கு காவிரி குடிநீர், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்குவாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ஏராளமான ஊருணிகள் உள்ளன. இவற்றில் ஒருசிலவற்றை தவிர்த்து பெரும்பாலான ஊருணிகள் பராமரிக்கப்படாமல் அதன் அடையாளத்தை இழந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெளிப்பட்டிணம்- ஓம்சக்தி நகருக்கு செல்லும் வழியில் உள்ள சாயக்கார ஊருணி குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
2023 ல் இந்த ஊருணி ஆழப்படுத்தி பராமரிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் கண்காணிப்பு இல்லாமல் ஊருணி குப்பை, கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது.கரைப்பகுதியில் முழுமையாக சீமைக்கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.
எனவே சாயக்கார ஊருணியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கரையை பலப்படுத்தி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வாரி செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-------------