sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புதிய பாலம் திறப்பிற்காக அவசர கதியில் ரோடு அமைக்கும் பணி

/

புதிய பாலம் திறப்பிற்காக அவசர கதியில் ரோடு அமைக்கும் பணி

புதிய பாலம் திறப்பிற்காக அவசர கதியில் ரோடு அமைக்கும் பணி

புதிய பாலம் திறப்பிற்காக அவசர கதியில் ரோடு அமைக்கும் பணி


ADDED : ஜூலை 20, 2025 10:53 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறப்பதற்காக ரோட்டை அகலப்படுத்தும் பணிக்காக பட்டாதாரர் இடத்திற்கு நிதி ஒதுக்காமல் அவசரக் கதியில் ரோடு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முதுகுளத்துார் - பரமக்குடி ரோட்டில் வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. அவசர நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் வாகனங்களில் சிரமப்பட்டு வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் வரத்து கால்வாய் கடந்து செல்ல ஒருவழி பாதையாக மாற்றுவதற்காக புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது.

தற்போது கடந்த 8 மாதத்திற்கு மேலாக எந்தவொரு பணியும் நடைபெறாமல் புதிய மேம்பாலம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் அடிக்கடி செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டியது.

பாலத்தின் முடிவில் ரோட்டோரத்தில் அகலப்படுத்துவதற்காக இடம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அவசரகதியில் அதிகாரிகள் வீட்டிற்கு சென்று பட்டாதாரர்களிடம் கையொப்பம் பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று போலீஸ் உதவியுடன் ரோடு அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு முழுமையான திட்டமிடல் இல்லாததால் தற்போது வரை பாலம் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பாலத்தை திறப்பதற்காக அவசரகதியில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு முறையாக கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நிதி வழங்கப்பட்டு ரோடு அமைக்கும் பணியை ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனவே இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us