sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உடல் உறுப்பு தானம் செய்தல் விழிப்புணர்வுக்கு வலியுறுத்தல்

/

உடல் உறுப்பு தானம் செய்தல் விழிப்புணர்வுக்கு வலியுறுத்தல்

உடல் உறுப்பு தானம் செய்தல் விழிப்புணர்வுக்கு வலியுறுத்தல்

உடல் உறுப்பு தானம் செய்தல் விழிப்புணர்வுக்கு வலியுறுத்தல்


ADDED : பிப் 01, 2025 04:55 AM

Google News

ADDED : பிப் 01, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்ற அறிவிப்பை கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

விபத்து மற்றும் சில வகை நோயால் மூளைச்சாவு அடையும் நோயாளிகளிடமிருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் தானமாக பெறுவதால் பலரின் வாழ்க்கைக்கு உதவுகிறது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

கலெக்டர் நேரில் செல்வார். அவர் வரமுடியாவிட்டால் டி.ஆர்.ஓ., அல்லது ஆர்.டி.ஓ., சென்று மரியாதை செலுத்துவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திருவாடானை தாலுகாவில் பாண்டுகுடியை சேர்ந்த திருமலை, கற்காத்தகுடியை சேர்ந்த இக்னேஷியஸ்ராஜ் ஆகியோரின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

இறந்தவர்களின் உறுப்புகளை கொடுப்பதால் பல உயிர்கள் காக்கப்படுகிறது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

அரசின் இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று முகாம் நடத்தி தெரியப்படுத்தினால் விழிப்புணர்வு ஏற்பட்டு உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகும் என்றனர்.






      Dinamalar
      Follow us