sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜன. 31 வரை கிராமங்களில் கால்நடைகளுக்கு  தடுப்பூசி

/

ஜன. 31 வரை கிராமங்களில் கால்நடைகளுக்கு  தடுப்பூசி

ஜன. 31 வரை கிராமங்களில் கால்நடைகளுக்கு  தடுப்பூசி

ஜன. 31 வரை கிராமங்களில் கால்நடைகளுக்கு  தடுப்பூசி


ADDED : ஜன 02, 2025 11:28 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கிராமங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் இன்று (ஜன.3) முதல் ஜன.31 வரை கிராமம் வாரியாக தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கால் காணை மற்றும் வாய் காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம், உற்பத்தி இழப்பு ஏற்படுத்துகிறது. இந்நோயால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

எனவே கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயைக் கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால் காணை மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 6--வது சுற்று ஜன.3 (இன்று) முதல் 31 வரை நடைபெற உள்ளது.

கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகளை ஊரில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி போட்டு பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு கால்நடை பராமரிப்புதுறை மருந்தங்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us