/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் விழாவில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு
/
கோயில் விழாவில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு
ADDED : மார் 14, 2024 11:50 PM

கமுதி : கமுதி அருகே பம்மனேந்தல் கழுகூரணி முனியப்பசாமி, சீலைக்காரி அம்மன், காரைக்கூட்ட அய்யனார், காளியம்மன் கோயில் 16ம் ஆண்டு மாசிக்களரி விழா நடந்தது. விழாவில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடந்தது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளைக்கும் தலா 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு கிராமத்தின் சார்பில் குத்து விளக்கு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. சில வீரர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது. கமுதி சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.

