ADDED : ஜூன் 12, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி; கமுதி அருகே கிளாமரம் கிராமத்தில் சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோயில் முன் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி கிராமத்தின்முக்கிய வீதிகளில் பெண்கள் ஊர்வலமாக துாக்கிச் சென்று தண்ணீரில் கரைத்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.