sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் வன்னிகா சூரன் வதம்

/

பரமக்குடியில் வன்னிகா சூரன் வதம்

பரமக்குடியில் வன்னிகா சூரன் வதம்

பரமக்குடியில் வன்னிகா சூரன் வதம்


ADDED : அக் 13, 2024 04:26 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி நிறைவு

பரமக்குடி: பரமக்குடி பெருமாள், சிவன், முருகன் கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி வன்னிகா சூரன் வதம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கடந்த 9 நாட்களாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். இதே போல் ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பிகை தினமும் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார்.

தொடர்ந்து நேற்று குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பெருமாள் கோயில் படித்துறையில் எழுந்தருளினார். அப்போது பெருமாள் மற்றும் விசாலாட்சி அம்மன் தனித்தனியாக வன்னிகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள முருகன் கோயிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிகா சூரன் வதம் நடந்தது. மேலும் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் சுவாமி குதிரை வாகனத்தில் அலங்காரமாகி நேற்று காலை அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us