/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
/
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ADDED : பிப் 18, 2025 04:57 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் வி.ஏ.ஓ., பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆர்.எஸ். மங்கலம் தாலுகா குமிழேந்தலைச் சேர்ந்த விவசாயி தனது தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கான பட்டா மாறுதல் கேட்டு பகவதிமங்கலம் வி.ஏ.ஓ., பார்த்திபனை 28, அணுகினார். பட்டா மாற்றத்திற்கு ரூ.50ஆயிரம் கேட்டுள்ளார்.
முதற்கட்டமாக ரூ.37ஆயிரம் கொடுக்குமாறும், பணி முடிந்த பின் மீதித் தொகையை தருமாறு கூறியுள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விவசாயி புகார் செய்தார்.
அவர்கள் அறிவுரைப்படி பிப்.,7 ல் விவசாயி ரூ.37ஆயிரத்தை கொண்டுசென்ற போது ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கொடுக்குமாறு பார்த்திபன் கூறியுள்ளார். அதன்படி பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இ-சேவை மைய பொறுப்பாளர் அகமது ஜாப்ரின் அலி 25, என்பவரை கைது செய்தனர். வி.ஏ.ஓ., பார்த்திபன் தலைமறைவாகி ஜாமினில் வந்துள்ளார்.
இந்நிலையில் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள வி.ஏ.ஓ., பார்த்திபனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் உத்தரவிட்டார்.

