/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 29, 2026 05:26 AM

திருவாடானை: கிராம நிர்வாக அலுவலகங்களை நவீனப்படுத்துதல், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட கவுரவ தலைவர் நம்பு ராஜேஷ் தலைமை வகித்தார்.
வட்டாரத் தலைவர் சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ், வட்டச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வி.ஏ.ஓ., பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இதில் சங்கத்தைச் சேர்ந்த 44 வி.ஏ.ஓ.க்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
நாளை (ஜன.,30) சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முதுகுளத்துார்: தாலுகா அலுவலகத்தில் வி.ஏ. ஓ.க்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கவுரவ தலைவர் சண்முகவேல்,வட்ட செயலாளர் சிவக்குமார், வட்ட பொருளாளர் மணிமூர்த்தி, வட்ட துணைத்தலைவர் அன்புச்செல்வம் முன்னிலை வகித்தனர்.30 வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

