ADDED : ஏப் 01, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான கோயிலில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் அருள் பாலிக்கின்றனர். இங்கு பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று காலை தாயார் மண்டபத்தில் பெருமாள், பெருந்தேவி தாயார் ஊஞ்சல் சேவையில் திருக்கல்யாணம் நடந்தது.
பின்னர் மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 5ம் நாள் விழாவில் பூப்பல்லக்கில் பெருமாள், தாயார் உலா வருவர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
--
