
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி; கமுதி கல்லுப்பட்டியில் சுல்லக்கரை காளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் பூஜை நடந்தது. காலையில் கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடந்தது. பின்பு கும்ப அலங்கார புனிதநீர் ஊற்றப்பட்டது.
பின் அம்மனுக்கு பால், சந்தனம், உட்பட 16 வகை அபிஷேகங்கள், பூஜைகள் தீபாராதனை நடந்தது. விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

