sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரண்மனை ரோட்டில் வாகனங்களில் போக முடியல..ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

/

அரண்மனை ரோட்டில் வாகனங்களில் போக முடியல..ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

அரண்மனை ரோட்டில் வாகனங்களில் போக முடியல..ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

அரண்மனை ரோட்டில் வாகனங்களில் போக முடியல..ஆக்கிரமிப்பு அதிகரிப்பு


ADDED : மார் 02, 2024 04:36 AM

Google News

ADDED : மார் 02, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை ரோட்டில் சிலர் நடுரோடு வரை கூரை அமைப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் மெயின் பஜரான அரண்மனை பகுதியை சுற்றிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், காய்கறி, பழங்கள் வியாபாரம் நடப்பதால் எப்போதுமே வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.

ஏற்கனவே அரண்மனை ரோட்டில் நடை பாதை, தள்ளு வண்டிகளில்

வியாபாரம் செய்கின்றனர். இவர்களில் சிலர் அத்துமீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நடுரோடு வரை கூரை அமைத்துள்ளனர்.

இதனால் அரண்மனை முதல் கேணிக்கரை, சாலைத்தெரு ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கயிறு கட்டி ஒதுக்கியுள்ள இடத்திற்குள் வியாபாரம் செய்ய வேண்டும்.

மாறாக நடு ரோடுவரை ஆக்கிரமிக்கும் கடைகளை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us