ADDED : ஜன 12, 2026 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பனைக்குளத்தில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. வாலாந்தரவை கால்நடை உதவி டாக்டர் சித்தி மர்ஜிதா, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி கால்நடை டாக்டர் திவ்யா, கால்நடை ஆய்வாளர் கங்கா தேவி, பராமரிப்பு உதவியாளர் கண்ணகி குழுவினர் பசு மாடு, ஆடு, கோழிகளை பரிசோதனை செய்தனர்.
காணை நோய், தோல் அலர்ஜி, ஆட்டுக் கொல்லி நோய், ரேபிஸ் நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

