ADDED : செப் 03, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நான்காம் நிலைக்கு இணையான ‘டி’ கிரேடு ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். வட்டார தலைவர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
