sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் அருகே 800 ஆண்டுகள்பழமை வாய்ந்த ஆலமரம் அகற்றம்; நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

/

ராமநாதபுரம் அருகே 800 ஆண்டுகள்பழமை வாய்ந்த ஆலமரம் அகற்றம்; நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

ராமநாதபுரம் அருகே 800 ஆண்டுகள்பழமை வாய்ந்த ஆலமரம் அகற்றம்; நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

ராமநாதபுரம் அருகே 800 ஆண்டுகள்பழமை வாய்ந்த ஆலமரம் அகற்றம்; நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் வலியுறுத்தல்


UPDATED : ஏப் 02, 2025 07:50 AM

ADDED : ஏப் 02, 2025 03:08 AM

Google News

UPDATED : ஏப் 02, 2025 07:50 AM ADDED : ஏப் 02, 2025 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் மாரியம்மன் கோயில் அருகே இருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்டி அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கிராமத்தினர் மனு அளித்து வலியுறுத்தினர்.

புதுமடம் ஊர்த் தலைவர் நீலமேகம் தலைமையில் கிராமத்தினர் ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தாராம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியுள்ளதாவது: புதுமடத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த மரத்தின் நிழலில் அரசு தொலைக்காட்சி கட்டடம் உள்ளது. இங்கு தான் கிராமசபை கூட்டமும் நடக்கிறது. இந்நிலையில் கிராமத்திற்கு சம்பந்தமில்லாத சிலர் அரசு அனுமதி பெறாமல், முன்னறிவிப்பின்றி ஆலமரத்தை வெட்டினர். மேலும் மாரியம்மன் கோயிலுக்கு செல்ல விடாமல் தடை ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளனர்.

பின் ஊர் தலைவர் நீலமேகம் கூறியதாவது: வெட்டப்பட்ட ஆலமரத்தில் ஏராளமான பறவைகள் வாழ்ந்தன. கால்நடைகள், மனிதர்களுக்கு நிழல் தந்த மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். மரத்தை வெட்டிய போது தடுக்க முயன்றோம். ஆனால் அடியாட்கள் மூலம் மிரட்டல் விடுத்தனர். மரத்தை வெட்டியவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us