sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு

/

இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு

இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு

இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு


ADDED : ஜன 02, 2025 11:25 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி; கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தும் இழப்பீடு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் நேற்று காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட செவல்பட்டி, உச்சிநத்தம், வி.சேதுராஜபுரம், கொண்டுநல்லான் பட்டி, கொக்கரசன் கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த மாதம் பெய்த மழையால் மிளகாய், மல்லி, உளுந்து உள்ளிட்ட சிறு குறு தானியங்கள் பெருமளவில் சேதமடைந்தது.

இந்நிலையில் கடந்த 2023, - 2024 ஆண்டுகளில் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் தங்களுடைய பயிர்களுக்கு காப்பீடு செய்தும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் முன்புறம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலாடி வருவாய்த் துறையினர், போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us