sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆற்றுக்குள் கிடந்த பட்டா கத்தி கொலைக்கு பயன்படுத்தபட்டதா

/

ஆற்றுக்குள் கிடந்த பட்டா கத்தி கொலைக்கு பயன்படுத்தபட்டதா

ஆற்றுக்குள் கிடந்த பட்டா கத்தி கொலைக்கு பயன்படுத்தபட்டதா

ஆற்றுக்குள் கிடந்த பட்டா கத்தி கொலைக்கு பயன்படுத்தபட்டதா


ADDED : ஜன 19, 2025 04:59 AM

Google News

ADDED : ஜன 19, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ஆற்றுக்குள் கிடந்த பட்டாக் கத்தியை போலீசார் கைப்பற்றி கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மணிமுத்தாறு உள்ளது. இந்த ஆற்றுக்குள் இரண்டு அடி நீள பட்டாக் கத்தி கிடந்தது. அப்பகுதி வழியாக சென்ற சிலர் போலீசுக்கு தெரிவித்தனர்.

திருவாடானை எஸ்.ஐ., முகமது சுல்தான் இப்ராஹிம், தனிப்பிரிவு ஏட்டு துரை ஆகியோர் கத்தியை கைப்பற்றினர். கத்தியானது தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

துருப்பிடிக்காமல் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வீசியிருக்கலாம் என்றும், கொலைக்காக பயன்படுத்தபட்ட கத்தியா என போலீசார் விசாரிக்கின்றனர்.

இது குறித்து அறிய ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us