sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலில் கழிவு நீர் கலப்பு உயிரினங்களுக்கு ஆபத்து

/

கடலில் கழிவு நீர் கலப்பு உயிரினங்களுக்கு ஆபத்து

கடலில் கழிவு நீர் கலப்பு உயிரினங்களுக்கு ஆபத்து

கடலில் கழிவு நீர் கலப்பு உயிரினங்களுக்கு ஆபத்து


ADDED : ஜன 07, 2025 04:28 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம்: தேவிபட்டினம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கடலில் நேரடியாக கலந்து வருவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

தேவிபட்டினம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள், பெரும்பாலும் குழாய் மூலம் தரையில் பதிக்கப்பட்டு நேரடியாக கடலில் கலக்கும் வகையில் கடலில் விடப்பட்டு வருகின்றன.

கடற்கரையோரங்களில், குழாய்கள், கழிவுநீர் வாய்க்கால் மூலமும், குடியிருப்பு கழிவுகள், கடலில் நேரடியாக கலப்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது.

இதன்விளைவாக, கடலுக்குள் உள்ள பவளப்பாறைகள் மற்றும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் குதிரை, கடல் அட்டை, கடல் ஆமைகள், கடல் பசுக்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் கடல் மாசின் காரணமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் குறைந்து வரும் நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மீன் வளமும் பாதிக்கப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம், குடியிருப்பு கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதை தடுப்பதற்கு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us