ADDED : ஏப் 15, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் அருகே பொதுமக்களுக்கு கோடை காலத்தில் உதவும் வகையில் நீர் மோர் பந்தலை எஸ்.பி., சந்தீஷ் தொடங்கி வைத்தார்.
இங்கு பொதுமக்களுக்கு காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தர்பூசணி, மோர், பானக்கரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை டி.எஸ்.பி., முத்துராமலிங்கம் செய்திருந்தார்.