ADDED : ஏப் 21, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: அழகன்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலை நதிப்பாலம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையம் பகுதியில், போலீசார் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கினர்.
ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மருது பாண்டியன், போலீஸ் எஸ்.ஐ.,கள் கலைமுருகன், திருநாகசுந்தரம் பங்கேற்றனர்.

