/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பெரிய கண்மாய் கலுங்கு 5 ஷட்டர்களில் வீணாக வெளியேறும் நீர்
/
ராமநாதபுரம் பெரிய கண்மாய் கலுங்கு 5 ஷட்டர்களில் வீணாக வெளியேறும் நீர்
ராமநாதபுரம் பெரிய கண்மாய் கலுங்கு 5 ஷட்டர்களில் வீணாக வெளியேறும் நீர்
ராமநாதபுரம் பெரிய கண்மாய் கலுங்கு 5 ஷட்டர்களில் வீணாக வெளியேறும் நீர்
ADDED : நவ 23, 2024 06:35 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென் கலுங்கில் முறையான பராமரிப்பு செய்யப்படாததால் 5 ஷட்டர்களில் வீணாகும்நீரால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். இந்த கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய், கண்மாய் பகுதி துார்வாரப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது.
இதனால் நீர்பிடிப்பு பகுதி பாதியாக குறைந்து விட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் கண்மாய் கலுங்குகள், ஷட்டர்களை முறையாக பராமரிப்பு செய்யவில்லை. தற்போது கண்மாய் பகுதியில் நீர் நிரம்பி வருகிறது.
தென் கலுங்கு ஷட்டர்பகுதியில் ஏற்பட்ட இடைவெளியால் கண்மாயில் தேங்கியுள்ள நீர் வெளியேறுகிறது. முறையாக ஷட்டர் பராமரிப்பு செய்யாததே இதற்கு காரணம். ஷட்டர்கள் சேதமடைந்து நொறுங்கும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் இதனை சீரமைக்கும் பணியை செய்யாமல்அலட்சியம் காட்டுகின்றனர்.
கண்மாயில் தென் கலுங்கு பகுதியில் தண்ணீர் திறப்பதற்காக 6 ஷட்டர்கள் இருக்கும் நிலையில் 5 ஷட்டர்களில் வீணாக தண்ணீர் வெளியேறுகிறது. வினாடிக்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 கன அடி நீர் வீணாவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் நிலையில் தேக்கப்பட்ட தண்ணீர் வீணாகிறது.