/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : டிச 18, 2025 05:29 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் ஜல்-ஜீவன் திட்டத்தில் பணியின் போது குழாய் உடைந்து காவிரி கூட்டுக் குடிநீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது. அவ்விடங்களை கண்டறிந்து உடன் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, ஜல்-ஜீவன் திட்டத்தில் வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிக்காக குழி தோண்டும் போது குழாய் சேதமடைந்து காவிரி குடிநீர் வீணாகிறது. குறிப்பாக தாலுகா அலுவலகம் அருகே வண்டிக்காரத்தெரு ரோட்டில் கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது.
குடிநீர் வீணாகும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

