sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பரமக்குடியில் ரோடுகளில் தேங்கிய தண்ணீர்

/

 பரமக்குடியில் ரோடுகளில் தேங்கிய தண்ணீர்

 பரமக்குடியில் ரோடுகளில் தேங்கிய தண்ணீர்

 பரமக்குடியில் ரோடுகளில் தேங்கிய தண்ணீர்


ADDED : நவ 25, 2025 05:28 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ரோடுகளில் தண்ணீர் தேங்கியது. நகராட்சி பகுதியில் தார் ரோடுகள் சேதமடைந்தன.

மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இரண்டு நாட்களாக பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், நெடுஞ்சாலை ஓரங்களில் மழை நீர் கடந்து செல்ல வழியின்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் நெடுஞ்சாலை பாரதி நகர், வசந்தபுரம் பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்டும் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் செல்ல வழியில்லை. மேலும் நகராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அமைக்கப்பட்ட தார் ரோடுகள் அனைத்தும் பெயர்ந்து வருகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதுடன் ரோட்டில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. ஆகவே நெடுஞ்சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதுடன், நகராட்சி ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us