ADDED : அக் 27, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 7-வது மகா சபை கூட்டம் நடந்தது.
பரமக்குடியில் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நடந்த மகாசபை கூட்டத்திற்கு பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தலைமை வகித்தார். சங்க முன்னாள் தலைவர் நாராயணன், செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
நெசவாளர்களுக்கு போனஸ் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன. கைத்தறி உதவி இயக்குனர் அலுவலக அலுவலர்கள் விமல், ரத்தின பாண்டியன், குரு ராஜன், குபேந்திரன், நாகேஸ்வரன் மற்றும் காங்., மாவட்ட வக்கீல் பிரிவு சரவணகாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.