/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தரணீஸ்வரர் புஷ்பவனேஸ்வரி கோயிலில் திருக்கல்யாணம்
/
தரணீஸ்வரர் புஷ்பவனேஸ்வரி கோயிலில் திருக்கல்யாணம்
ADDED : ஜூலை 29, 2025 12:32 AM
கமுதி: கமுதி அருகே அ.தரைக்குடி கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட தரணீஸ்வரர் புஷ்பவனேஸ்வரி கோயிலில் 41வது ஆண்டு திருக்கல்யாண விழா நடந்தது.
தேவஸ்தான அலுவலகம் செயல் அலுவலர் குகனேஸ்வரன் தலைமை வகித்தார். இதனை முன்னிட்டு காலை கணபதி ஹோமம் துவங்கி உற்ஸவர் தரணீஸ்வரர் புஷ்பவனேஸ்வரிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின்பு கலந்து கொண்ட பக்தர்களுக்கு மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மூலவரான தரணீஸ்வரருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.