ADDED : ஜன 26, 2026 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியின் நிறுவனரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி தர்மக்கண் 21வது நினைவு நாள் கல்லுாரியில் அனுசரிக்கப்பட்டது. தாளாளர் அமேஷ் ஜெபராஜ் தலைமை வகித்தார். முதல்வர் குருசாமி முன்னிலை வகித்தார்.
கன்னிராஜபுரம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு போர்வை உள்ளிட்ட ஆடைகள் வழங்கப்பட்டது. கல்லுாரி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மனுவேல், சுசிலா, சவுந்தரராஜன், பத்மாவதி உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

