sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைப்பது என்னாச்சு: நடப்பு ஆண்டில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

/

கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைப்பது என்னாச்சு: நடப்பு ஆண்டில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைப்பது என்னாச்சு: நடப்பு ஆண்டில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைப்பது என்னாச்சு: நடப்பு ஆண்டில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை


ADDED : மார் 25, 2025 05:36 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 33 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி, மிளகாய் 50 ஆயிம் எக்டேர், சிறுதானியங்கள் 11 ஆயிரம் எக்டேர், பயறுவகைகள் 4500 எக்டேர், எண்ணெய்வித்து 2500 எக்டேரில் பயிரிடுகின்றனர்.

ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை சராசரியாக 827 மி.மீ., என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மழைநீரை சேமிக்க பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள 1122 சிறுபாசன கண்மாய்கள் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் முள் செடிகள் வளர்ந்தும், குப்பை கொட்டியும் பாழாகியுள்ளன. இது தொடர்பாக ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் புகார் கூறினர்.

இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டில் 50 ஏக்கரில் உள்ள கண்மாய், ஊருணிகளை மட்டும் பொதுப்பணித்துறையுடன் (நீர்வளம்) இணைத்து பராமரிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

அது போன்ற கண்மாய்களை கணக்கெடுக்க அப்போதைய கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பிறகு அப்படியே திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தாலும் கிராமங்களில் உள்ள பாசன குளம், கண்மாய்களில் முழுமையாக நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே 50 ஏக்கருக்கு மேல் உள்ள ஊருணி, கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைக்கும் திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us