sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஹைட்ரோ கார்பன் பணிகள் துவக்கம் அனுமதி மறுத்த அரசு அறிவிப்பு என்னாச்சு?

/

ஹைட்ரோ கார்பன் பணிகள் துவக்கம் அனுமதி மறுத்த அரசு அறிவிப்பு என்னாச்சு?

ஹைட்ரோ கார்பன் பணிகள் துவக்கம் அனுமதி மறுத்த அரசு அறிவிப்பு என்னாச்சு?

ஹைட்ரோ கார்பன் பணிகள் துவக்கம் அனுமதி மறுத்த அரசு அறிவிப்பு என்னாச்சு?


ADDED : செப் 02, 2025 05:36 AM

Google News

ADDED : செப் 02, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம்:அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் எதிர்ப்பை மீறி, ஹைட்ரோ கார்பன் பணிகளை ஓ.என்.ஜி.சி., நிறுவனம் துவங்கியுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், 1,403 சதுர கி.மீ., பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.

முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில், 20 இடங்களில் சோதனை கிணறுகள் அமைக்க, 675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கு விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த சர்ச்சை எழுந்த அன்றைய தினமே, ஹைட்ரோ கார்பன் சோதனைக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தேவிபட்டினம் அருகே மாதவனுார் பழைய மங்கம்மாள் சாலை பகுதியில் சில நாட்களாக ஓ.என்.ஜி.சி., சார்பில் இத்திட்டத்திற்கு இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, காவிரி வைகை - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலர் அர்ச்சுனன், ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியிருந்த நிலையில், பணிகள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us