sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு என்னாச்சு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்தானது திறப்பு விழாவும் இழுபறி

/

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு என்னாச்சு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்தானது திறப்பு விழாவும் இழுபறி

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு என்னாச்சு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்தானது திறப்பு விழாவும் இழுபறி

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு என்னாச்சு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்தானது திறப்பு விழாவும் இழுபறி


ADDED : ஜன 18, 2025 12:45 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரத்திற்கு நேற்று பராமரிப்புக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் வருவது ரத்து செய்யப்பட்டதால் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு என்னாச்சு என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் 1914ல் பாம்பன் கடலில் அமைத்த ரயில் பாலம் பலமிழந்த நிலையில் 2022 நவ.,23ல் துாக்கு பாலத்தின் இரும்புத்துாண் சேதமடைந்ததால் அன்று முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது. இதற்கு முன்பே 2020ல் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு தற்போது 100 சதவீதம் பணிகள் முடிந்து டிச.,ல் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் நவ.,13, 14ல் புதிய பாலத்தை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி ஆய்வு செய்ததில் பாலத்தின் இரும்பு கர்டர்கள் மற்றும் துாக்கு பாலத்தில் சில குறைகளை சுட்டிக்காட்டினார். இதனால் திறப்பு விழா தள்ளிப்போனது. இதன் பின் ரயில்வே அமைச்சகத்தின் 5 பேர் குழு ஜன.,10,11ல் புதிய பாலத்தை ஆய்வு செய்தனர். இதில், புதிய பாலம் மற்றும் துாக்கு பாலம் சீரமைக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முதல் திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களின் காலி பெட்டிகள் முன்பு போல பராமரிப்புக்கு ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. இதையடுத்து புதிய பாலம் விரைவில் திறக்கப்படும். ரயிலில் பயணிக்கலாம் என பயணிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

மீண்டும் இழுபறி


தண்டவாளத்தில் அதிர்வு குறித்து ஆய்வு செய்யும் ரயில் இன்ஜினை பயன்படுத்தி ஜன.,16ல் பாம்பன் புதிய துாக்கு பாலத்தில் 4 முறை சோதனை ஓட்டம் நடத்தினர். இந்நிலையில் அன்றிரவே திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்கு ராமேஸ்வரம் செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதனால் பாம்பன் பாலம் திறப்பு விழா மீண்டும் இழுபறியில் உள்ளது. வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் லிப்ட் முறையில் இயங்கும் வகையில் வடிவமைத்த 620 டன் புதிய ரயில் துாக்கு பாலத்திற்கு என்னாச்சு என தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us