/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரும் பிரிந்தது
/
கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரும் பிரிந்தது
ADDED : டிச 05, 2024 11:25 PM

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழச்சிறுபோது கிராமத்தில் கணவர் இறந்த தகவலை கேட்டு மனைவியும் உயிரிழந்தார்.
முதுகுளத்துார் அருகே கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி 68. இவரது மனைவி அங்காளம்மை 63. உடல்நிலை சரியில்லாமல் ராஜாமணி ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை உயிரிழந்தார்.
இத்தகவலைகேட்டு மனைவி அங்காளம்மை அழுது துடித்தார். சிறிது நேரத்தில் கீழச்சிறுபோது கிராமத்தில் அவரது வீட்டில் அங்காளம்மை உயிரும் பிரிந்தது. மரணத்திலும் தம்பதிகள் இணைபிரியாதது சோகத்தை ஏற்படுத்தியது. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.