sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

/

முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்


ADDED : ஜூலை 02, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கீரனுார் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகள் தரிசு நிலங்களை பள்ளமாக்கி அட்டூழியம் செய்கின்றன.

முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட சிறுதானி பயிர்கள் விவசாயம் செய்தனர்.

தற்போது ஓரளவு விவசாயப் பணிகள் முடிந்ததால் ஏராளமான கிராமங்களில் தரிசு நிலங்களாகவே உள்ளது.

முதுகுளத்துார் அருகே கீரனுார் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் தரிசு நிலங்களை குழிதோண்டி பள்ளமாக்கி அட்டூழியம் செய்கின்றன.

அது மட்டும் இல்லாமல் காட்டுப்பன்றிகள் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதே நிலைமை தொடர்ந்தால் பருவமழை காலத்தில் நெற்பயிர்களை ஆரம்ப காலத்தில் காட்டுப்பன்றிகள் சேதபடுத்தும் நிலை உள்ளது.

எனவே காட்டுப்பன்றிகளை சுடலாம் என்ற அரசு உத்தரவை வரும் காலங்களில் விரைவில் முதுகுளத்துார், கமுதி பகுதியில் அமல்படுத்தி காட்டுப்பன்றிகள் தொல்லையிலிருந்து கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us