sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கமுதி அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

/

கமுதி அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

கமுதி அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

கமுதி அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்


ADDED : ஜன 05, 2024 05:30 AM

Google News

ADDED : ஜன 05, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே த.புனவாசல், அ.தரைக்குடி கிராமத்தில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கமுதி அருகே வல்லந்தை, டி.வல்லக்குளம், த.புனவாசல், அ.தரைக்குடி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800 ஏக்கருக்கும் அதிகமாக நெற்பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழையால் மழைநீர் செல்ல வழியின்றி விவசாய நிலங்களில் தேங்கி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் விவசாயிகள் கூடுதல் பணம் செலவு செய்து மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்றி வந்தனர். கமுதி அருகே த.புனவாசல், அ.தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நன்கு வளர்ந்துள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது.

விளைச்சல் நிலையில் நெற்பயிர்கள் அழிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல், கடலை, சிறுதானியப் பயிர்களை காட்டுப்பன்றிகள்​ கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us