sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பணி நியமனத்திற்கு 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கருணை காட்டுமா அரசு

/

பணி நியமனத்திற்கு 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கருணை காட்டுமா அரசு

பணி நியமனத்திற்கு 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கருணை காட்டுமா அரசு

பணி நியமனத்திற்கு 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கருணை காட்டுமா அரசு


ADDED : ஏப் 13, 2025 03:30 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2010 ம் ஆண்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டும் 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் மிது கருணை காட்டி தி.மு.க., அரசு பணி நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2010ல் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 6500 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒரு பணிக்கு 5 பேர் வீதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர்.

24 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 6500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் 5500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு நியமனத்திற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவு 2010 ஆக.,23 முதல் அமல்படுத்தப்பட்டது.

தகுதி தேர்வு அறிவிப்புக்கு முன்னர் பணி நியமனத்திற்கான பணிகள் துவக்கப்பட்டிருந்தால் அவர்களை பணி நியமனம் செய்யலாம் என கட்டாய கல்வி உரிமை சட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பெற்றனர்.

இந்நிலையில் 2011ல் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க., ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால் அ.தி.மு.க., அரசு இவர்களுக்கு பணி நியமனம் செய்யவில்லை.

அதன்பின் இவர்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை. அரசு கருணை காட்டி தங்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us