sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போலீஸ் ஸ்டேஷனில் ரகளை தொண்டியில் பெண் கைது

/

போலீஸ் ஸ்டேஷனில் ரகளை தொண்டியில் பெண் கைது

போலீஸ் ஸ்டேஷனில் ரகளை தொண்டியில் பெண் கைது

போலீஸ் ஸ்டேஷனில் ரகளை தொண்டியில் பெண் கைது


ADDED : ஜன 24, 2025 10:03 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை செய்து மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.

தொண்டி சிவன் கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் சபீனா 27. இவரது நகை, பணம் திருட்டு போனது குறித்து மூன்று நாட்களுக்கு முன் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு தொண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் சபீனா.

'மூன்று நாட்களாகியும் இன்னமும் கண்டுபிடிக்க வில்லை. நான் யார் தெரியுமா. பிரபல யுடியூப் சேனல் வைத்துள்ளேன். சில நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தில் ஒரு பிரியாணி கடை முதலாளியையும், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரையும் கதற விட்டேன். என் பின்னால் அனைத்து ஊடகங்களும் உள்ளன.

என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது. அதே போல் உங்களை என்ன பண்றேன்னு பாருங்கள்,' என்று பேசியபடி மேஜையில் இருந்த வழக்கு பைல்கள் மற்றும் நோட்டுகளை துாக்கி வீசினார். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து சபீனாவை, எஸ்.ஐ., விஷ்ணு கைது செய்தார்.






      Dinamalar
      Follow us