ADDED : ஆக 17, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: முதுகுளத்துார் அருகே அபிராமம் அடுத்த கோனேரியேந்தல் கிராமத்தில் வசிக்கும் முனியசாமி வீட்டில் பீரோவில் வைக்கப் பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள் ஆக.,8ல் திருடு போனது.
இது சம்பந்தமாக அபிராமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
திருட்டு நடந்த வீட்டில் கைரேகை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் முனியசாமியின் உற வினரான வித்யா என்பவரின் கைரேகையுடன் ஒத்துப் போனது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 14 பவுன் நகைகளை மீட்டனர்.