sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெண்ணின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை

/

பெண்ணின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை

பெண்ணின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை

பெண்ணின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை


ADDED : ஜன 08, 2025 01:23 AM

Google News

ADDED : ஜன 08, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்:தேவகோட்டை தனியார் மருத்துவமனை டாக்டர்களின் தவறான சிகிச்சையால் மனைவி இறந்ததாக கணவர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கொடுங்குளம் அந்தோணிசாமி மனைவி செல்வி (எ) அருள் மலர் 45. இவர் ஜன.3 ல் தேவகோட்டைதனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக மகனை அனுமதித்தார்.

இந்நிலையில் அருள் மலருக்கும் லேசான காய்ச்சல் இருந்ததால் இவருக்கு டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர். ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் அருள் மலருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இவரது உடலை உறவினர்கள் சொந்த ஊரான கொடுங்குளத்தில் அடக்கம் செய்தனர்.

போலீசில் புகார்


இந்நிலையில் தனது மனைவி இறப்பிற்கு தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி கணவர் அந்தோணிசாமி, தேவகோட்டை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அருள் செல்வியின் உடலை நேற்று தோண்டி எடுத்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதராஜன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us