sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிழக்கு கடற்கரை சாலையோரம் விபத்தை தடுப்பதற்கு தடுப்பு வேலி பணி துவக்கம்

/

கிழக்கு கடற்கரை சாலையோரம் விபத்தை தடுப்பதற்கு தடுப்பு வேலி பணி துவக்கம்

கிழக்கு கடற்கரை சாலையோரம் விபத்தை தடுப்பதற்கு தடுப்பு வேலி பணி துவக்கம்

கிழக்கு கடற்கரை சாலையோரம் விபத்தை தடுப்பதற்கு தடுப்பு வேலி பணி துவக்கம்


ADDED : மே 23, 2025 11:35 PM

Google News

ADDED : மே 23, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: கிழக்கு கடற்கரை சாலையை உயர்த்தி அமைக்கும் பணிகள் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நடந்து முடிந்தது. தற்போது சாலையோரம் விபத்தை தடுக்க வேலி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது கன்னிராஜபுரம், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, திருப்புல்லாணி, ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், நம்புதாளை, தொண்டி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் வழியாக செல்கிறது.

கன்னியாகுமரி - சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. ராமநாதபுரத்தில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை பல்வேறு பகுதிகளில் சாலையின் நடுவே அதிகமான பள்ளங்கள் இருந்தது. இதனால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாலை ஓரங்களில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையை உயர்த்தி அமைக்கும் பணிகள் முடிந்தது. தற்போது சாலையோரம் உள்ள குளக்கரையில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடக்கிறது.

இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், சமீபத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு ஆம்னி வேன் துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தில் 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் கார் விழுந்ததில் ஐந்து பேர் பலியாயினர்.

எனவே சாலையோரங்களில் உள்ள குளங்களில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது. தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான பணிகள் துவங்கியுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us