sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆம்புலன்சில் வேலை: பங்கேற்க அழைப்பு

/

ஆம்புலன்சில் வேலை: பங்கேற்க அழைப்பு

ஆம்புலன்சில் வேலை: பங்கேற்க அழைப்பு

ஆம்புலன்சில் வேலை: பங்கேற்க அழைப்பு


ADDED : டிச 04, 2024 04:39 AM

Google News

ADDED : டிச 04, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் 108 ல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் டிச.7 ல் திருவாடானை அரசு மருத்துவமனையில் நடக்கும் முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் 108 ல் ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். ஓட்டுநர், மருத்துவ உதவியாளராக பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நாளில் 24 வயதிற்கு மேல் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ., இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்று குறைந்த பட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,820 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், கண் பார்வைத்திறன், மற்றும் மருத்துவம் சம்பந்தமான தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மருத்துவ உதவியாளருக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., பிளஸ் 2 படித்து பின்னர் இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது லைப் சைன்ஸ் பி.எஸ்.சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம் ரூ.16,020 மொத்தமாக வழங்கப்படும். நேர்முகத்தேர்வு அன்று 19க்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை. மனித வளத்துறையின் நேர்முகத்தேர்வும் நடக்கும்.

இதில் தேர்வு பெற்றவர்களுக்கு 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி மற்றும் மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். விபரங்களுக்கு 044-2888 8060 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us