/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் நடக்கும் துாண்டில் வளைவு பாலம் பணி மந்தம்
/
பாம்பனில் நடக்கும் துாண்டில் வளைவு பாலம் பணி மந்தம்
பாம்பனில் நடக்கும் துாண்டில் வளைவு பாலம் பணி மந்தம்
பாம்பனில் நடக்கும் துாண்டில் வளைவு பாலம் பணி மந்தம்
ADDED : செப் 27, 2025 03:52 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் ரூ.70 கோடியில் துாண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது.
அக்., முதல் ஜன., வரை பருவமழை சீசனில் வங்கக் கடலில் வீசும் சூறாவளியால் ராட்சத அலைகள் எழும். அப்போது பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுவதால் பாம்பன் லைட்ஹவுஸ் கடற்கரையில் நிறுத்தியுள்ள நாட்டுப் படகுகள், கடல் அரிப்பால் வீடுகள் சேத மடைகிறது.
இதனை தடுக்க துாண்டில் வளைவு பாலம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரூ.70 கோடியில் பாம்பன் லைட் ஹவுஸ் கடற்கரையில் துாண்டில் வளைவு அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது.
இதனால் இந்த ஆண்டு படகையும், வீடுகளையும் பாதுகாக்க முடியாமல் போகுமோ என பாம்பன் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.