ADDED : பிப் 21, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : கடலாடி அருகே கடுகுச்சந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் காலை வழிபாட்டு கூட்டத்தில் தமிழாசிரியர் செலஸ்டின் மகிமை ராஜ் தமிழ் மொழியின் சிறப்பையும் உலகத் தமிழ் மொழி நாள் கொண்டாடப்படும் வரலாற்றையும் விளக்கி கூறினார்.
பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் லட்சுமணன் ஏற்பாட்டில் தலைமையாசிரியர் ராஜேஷ் வின்சென்ட் ஜெய்சிங் மாணவர்களோடு இணைந்து செண்பக மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டார். ஆசிரியர் பிரபு இம்மானுவேல் வரவேற்றார்.
ஆசிரியர்கள் பாரதி, திவ்யா, இளநிலை உதவியாளர் சரவணன், ஆய்வக உதவியாளர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசுப்பிரமணியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் முத்து உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.